நிர்வாக திட்டம்

2019-2024 ஆம் ஆண்டிற்கான நிர்வாகத் திட்ட நோக்கு: “வில்பத்து தேசிய பூங்கா அதன் பல்லுயிர் மற்றும் கலாசார பாரம்பரியத்தை தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறையினருக்காக பாதுகாக்கும்”

அறிமுகம்

வில்பத்து தேசிய பூங்காவானது நாட்டின் ஏனைய பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளைப் போல பல அச்சுறுத்தல்களையும் சவால்களையும் எதிர்கொள்கிறது; சட்டவிரோத நில ஆக்கிரமிப்பு, வனவிலங்குகளை வேட்டையாடுதல், காடழிப்பு, தொல்லியல் தளங்களை சேதப்படுத்துதல், ஆக்கிரமிப்பு தாவர இனங்கள் பரவுதல், கடல்சார் சூழல் மாசடைதல், மற்றும் மனித-வனவிலங்கு உட்பூசல்கள்.

உள்நாட்டுப் போரினால் ஏற்பட்ட அமைதியின்மையின் போது 20 ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த நிலையில், வில்பத்து தேசிய பூங்கா பிப்ரவரி மாதம் 2010 ஆம் ஆண்டு பொதுமக்களின் மற்றும் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக மீண்டும் திறக்கப்பட்டது. மற்றும் சுற்றுலாப்பயணிகள் பார்வையிடச் செல்லும் பிரதான இடமொன்று என்ற நிலையைப் பெற அது மீண்டும் தயாராக உள்ளது. சுற்றுலாத்துறையின் மேம்பாட்டிற்காக இலங்கை அரசாங்கத்தினால் இப்பகுதியானது இயற்கை பாதுகாப்பு மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டிய பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

 

2017 ஆம் ஆண்டில், ஜேர்மன் அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்டு ‘வில்பத்து தேசிய பூங்கா மற்றும் செல்வாக்கு வலயம்’ என்ற திட்டத்திற்கான நிர்வாக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. ‘செல்வாக்கு வலயம்’ என்றால் பூங்காவிற்கு அண்மையிலுள்ள பாதுகாக்கப்பட்ட பிரதேசங்கள் மற்றும் பூங்காவின் சுற்றுப்புறத்தில் உள்ள 34,000 மக்கள் வாழும் கிராமங்கள் போன்ற பிற நில பயன்பாடுகளையும் குறிக்கின்றது.

வில்பத்து தேசிய பூங்கா நிர்வாகத் திட்டம் 2019 – 2024 வரை பூங்காவை பராமரித்தல் மற்றும் நிர்வகித்தல் உட்பட பல குறிக்கோள்களைக் கொண்டுள்ளது, அதே வேளை இலங்கையின் பல்லுயிர் பெருக்கத்தின் போது சூழ உள்ளவற்றினால் ஏற்படும் தாக்கங்களைத் தணித்து, பல்லுயிர் வாழ்விட இழப்பின் போக்கை மாற்றியமைக்க கூடிய நியாயமான பிரதிநிதித்துவமாக இது செயற்படும். இந் நிர்வாகத் திட்டமானது உட்பூசல்களை குறைப்பதன் மூலமும், தொய்வடையாத வாழ்வாதார நடைமுறைகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதன் மூலமும் உள்ளூர் சமூகங்கள் மற்றும் வனவிலங்குகளின் நல்வாழ்வை ஊக்குவிக்கும்.

Leopard-on-Branch

நிர்வாகத் திட்டத்தின் நோக்கம்:

long-beaked-bird
  • வனவிலங்குகள் மற்றும் தாவர பாதுகாப்புச் சட்டம், ஈரநிலங்கள் பற்றிய மாநாடு, இடம்பெயரும் இனங்கள் மற்றும் பல்லுயிர் தொடர்பான மாநாடு மற்றும் ஐக்கிய நாடு சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான கட்டமைப்பு மாநாடு ஆகிவற்றில் குறிப்பிட்டபடி சுற்றுச்சூழல் தன்மைகளைப் பாதுகாப்பதற்காக சுற்றுச்சூழல் அமைப்புகளை பாதுகாத்தல் மற்றும் அவற்றின் செயல்முறைகளை பராமரித்தல். 
  • பல்லுயிரினங்களையும் அவற்றின் வாழ்விடங்களையும் பாதுகாக்கப்பதற்கும் அவற்றிக்கு நன்மைதரும் செயற் திட்டங்களை தேவையான போது மேற்கொள்ளும் வகையிலும் நிர்வாக திட்டங்கள் பயன்படுத்தப்படும்.
  • உயிரினங்கள் வாழ்வதற்கான ஆதாரங்களை இழந்த நிலப்பரப்புக்குரிய வனவிலங்குகள் வாழ்வதற்கு அடைக்கலம் அளித்தல்
  • அன்னிய ஆக்கிரமிப்பு இனங்களை கட்டுப்படுத்தல்  அல்லது களைதல்
  • சூழலியல் மற்றும் உயிரினங்களின் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
  • செல்வாக்கு மண்டலத்தில் மேலதிக நிர்வாக மண்டலங்களை உருவாக்குதல் மற்றும் பராமரித்தல் 
  • வில்லபத்து தேசிய பூங்கா மற்றும் அதனுடன் தொடர்புடைய பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள் வனவிலங்குகளின் இயக்கத்தை ஆதரிக்கும் செல்வாக்கு மண்டலத்தில் மேலதிக நிர்வாக வலயங்களை உருவாக்குதல் மற்றும் பராமரித்தல்.
  • பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் அழகியற் கொள்கைகளுக்கு எவ்வித பாதிப்புமின்றி சுற்றுலா நடவடிக்கைகளை  மேம்படுத்தல்.
  • செல்வாக்கு மண்டலத்தில் காணப்படும் பொழுதுபோக்கு வாய்ப்புக்களை, பூங்காவில் உள்ள பொழுதுபோக்குகளுடன் இணைத்து அவற்றை  தொடர்புபடுத்தல்.
  • வில்பத்து தேசிய பூங்காவின் மற்றும் செல்வாக்கு மண்டலத்தின் பல்லுயிர் மதிப்புகளை முன்னிலைப்படுத்தும் நோக்கத்துடன் உள்ளூர் சமூகங்களுக்கும் சுற்றுலா பிரயாணிகளுக்கும் தகவல் வழங்குதல்.
  • நிர்வாகத் திட்டங்களை திறம்பட செயற்படுத்த, பூங்கா ஊழியர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் பூங்கா நிர்வாகம், சட்ட அமுலாக்கம் மற்றும் பொது செயற்பாட்டுத் திறன் ஆகியவற்றை மேம்படுத்தல்.
  • செல்வாக்கு மண்டலத்தில், பல்லுயிரினங்களின் மதிப்பினையும் முக்கியத்துவத்தையும் நீண்டகாலமாகப் பாதுகாப்பதை உறுதி செய்வதற்கும் நாட்டின் பொருளாதார ஆற்றலினை உணர்ந்து கொள்வதற்கும் பொதுமக்களும் வியாபார உலகமும் நிர்வாகத் திட்டத்துடன் இணைந்து செயற்படவேண்டும்.
  • தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு, குறிப்பாக மனித-வனவிலங்கு மோதல்களுக்கு தீர்வு காண்பதற்கு சமூகமும் நிர்வாகமும்  தீவிரமாக செயற்படல்.
  • பல்வேறு விதமாக நில வளங்கள் பயன்படுத்தப்படுவதனால் அந்  நடைமுறைகளினால் சுற்றுச்சூழலில் ஏற்படும் பாதிப்புகளை கண்காணித்து ஆராயும் திட்டங்களில் இச் சமூகங்கள் ஈடுபடும்.
  • மேம்பாட்டுத் திட்டம், கூட்டுமுயற்சி மற்றும் செயலாக்கங்களை ஊக்குவிக்கும், அவை பாதுகாப்பு விழுமியங்களுடன் இணக்கமாகவும் ஆதரவாகவும் செயற்படும் போது அவை சமூக நல்வாழ்வை மேம்படுத்துகின்றன.
  •  
Shopping Basket
WNP

FREE
VIEW