தாவரங்கள்

அறிமுகம்

வில்பத்து தேசிய பூங்காவில் 623 க்கும் மேற்பட்ட வகையான பூச்செடிகள் உள்ளன, அவை பூங்கா முழுவதும் மாறுபட்ட நிலப்பரப்புகளையும் வாழ்விடங்களையும் சுற்றி பரவலடைந்துள்ளன.

ஆப்பிரிக்காவிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட இனங்கள் முதல் கடற்கரையில் உள்ள மந்தாரை வகைகள் அல்லது சதுப்புநில தாவரங்கள் வரையிலான இந்த அனைத்து தாவரங்களும் பல வகையான வனவிலங்குகளுக்கு வாழ்விடமாகவும் வாழ்வாதாரமாகவும் காணப்படுகின்றன. பூங்காவின் வெவ்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளை எதிர்கொள்ளும் தாவரங்களில், குறிப்பிடத்தக்க வேறுபாடுகளைக் காணலாம்.

Kumbuk-Tree

வில்பத்தில் வளரும் தாவரங்கள்

வில்பத்து தேசிய பூங்கா பல்வேறு வகையான பல்லுயிரியலை தன்னகத்தே கொண்டது.

பூங்காவில் உள்ள முதல் 5 வகையான தாவரங்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

வில்பத்தில் வளரும் தாவரங்கள்

வில்பத்து தேசிய பூங்கா பல்வேறு வகையான பல்லுயிரியலை தன்னகத்தே கொண்டது.

பூங்காவில் உள்ள முதல் 5 வகையான தாவரங்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

Aliyagaha--Baobab-Tree

பெருக்க மரம்

(அதான்சோனியா டிஜிடேட்டா)

கவர்ச்சியான ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட பெருக்க மரம் வில்பத்து தேசிய பூங்காவில் காணக்கூடிய விசித்திரமானதொரு காட்சியாகும், இம் மரமானது அரபு வர்த்தகர்களுடன் தொடர்புடைய வரலாற்றைக் குறிக்கிறது. சிறிய பெருக்க மரமொன்று கொல்லன்கந்தையில் காணப்படுகிறது, அதே நேரத்தில் குபுர வாவியில் பெரிய பெருக்கமரத்தைக் காணலாம், ஆனால் அதனைக் காண படகில் பயணம் செய்யவேண்டும்.

இலங்கையில் இது “அலி-கஹா” என்றும் அழைக்கப்படும். இந்த மரம் யானையின் (சிங்கள மொழியில் “அலியா” என அழைக்கப்படும்) சுருக்கமான தோலை ஒத்திருக்கும் தடித்த பட்டையை கொண்டிருப்பதால் இப் பெயரை பெற்றுள்ளது. பெருக்க மரம் தலைகீழாக நட்ட மரத்தைப் போலவும், வேர் போன்ற கிளைகளுடன் சிக்கலானதாக தோன்றும்.

வீரை மரம்

(ட்ரைபீட்ஸ் செபரியா)

வீரை மரத்தை பூங்காவினுள் பழங்களுடன் காணலாம், அவை பழுக்கும்போது பச்சை நிறத்தில் இருந்து பிரகாசமான சிவப்பு நிறமாக மாறும். இந்த கனிரசம் நிறைந்த பழங்கள் பறவைகளையும், தேன் கரடி உள்ளிட்ட பெரிய பாலூட்டிகளையும் ஈர்க்கின்றன.

இந்த மரம் 20 மீட்டர் உயரம் வரை வளர்கிறது மற்றும் அதன் தண்டுகள் பெரும்பாலும் வளைந்து கிளைகளை பரப்பி ஏனைய மரங்களிலிருந்து வேறுபட்டு காணப்படும். இவ்வாறு காணப்படுவது இம்மரத்திற்கு குறிப்பிட்டதொரு சிறப்புத்தன்மையைக் கொடுக்கிறது, அதே நேரத்தில் பல விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு வாழ்விடமாகவும்இம்மரம் காணப்படுகிறது.

Kumbuk-Tree

வெண் மருத மரம்

(டெர்மினியா அர்ஜுனா)

மருத மரம் இயற்கையாக தண்ணீரை சுத்திகரிக்கும் திறனுக்காக அறியப்படுகிறது, மேலும் கலா ஓயா மற்றும் மோதரகம் ஆறு ஆகிய ஆற்றங்கரைகளுக்கு அருகிலும், கும்புக் வில போன்ற பெரிய ஏரிகளின் அருகிலும் ஏராளமாக வளர்ந்து வருகின்றது. மரத்தின் பழைய இலைகள் கணிசமாக சிவப்பதன் மூலம் இம் மரம் எளிதில் அடையாளம் காணப்படுகிறது. இதன் பழம் மரப்பட்டை போன்ற கடினமான தோலை மற்றும் ஐந்து முகடுகளைக் கொண்டுள்ளது. இம் மரம் சுமார் 20-25 மீட்டர் உயரத்திற்கு வளர்கிறது, மேலும் இதன் பொதுவான தண்டைச் சுற்றி பல தாங்கும் வேர்கள் இணைந்திருக்கும்.

காயான்

(மெமெசிலோன் குடை)

இது சுமார் 4 மீட்டர் உயரமுள்ள சிறிய புதர் மரமாகும். மே - ஜூன் மாதங்களில் பூக்கள் பூக்கும் இம்மரம் அவையிருக்கும் காடுகளுக்கும் ஏரிகளுக்கும் அழகும் வண்ணமும் சேர்க்கின்றன.

இந்த புதர் மரத்தின் பூக்கள் ஒரு பிரகாசமான நீல நிறத்தில் மரம் முழுவதுமாக பூக்கும். இதன் இலைகளில் குளுக்கோசைடுவினால் ஆனா ஒருவித மஞ்சள் சாயம் இருப்பது அறியப்படுகிறது, இம் மஞ்சள் சாயம் பௌத்த துறவிகளின் ஆடைகளை சாயமிடுவதற்கும், பன்பாய்களுக்கு நிறமூட்டுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

மருத்துவ ரீதியாக, இதன் இலைகளில் வயிற்றுப போக்கை குணமாக்கும் குணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் பட்டை மற்றும் கிளைகள் மிகவும் கடினமானது, எனவே இந்த மரம் அயர்ன்வுட் என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.

Anuradhapura-Orchid

காந்தநாகுலி

(வந்தா தெசெல்லாட்டா)

காந்தநாகுலி இலங்கைக்கு உரித்தான மற்றும் வில்பத்து தேசிய பூங்காவில் காணப்படும் சில வகையான மந்தரைகளில் ஒன்றாகும்.

அதன் இதழ்களில் அழகியதொரு சாம்பல் மற்றும் ஊதா நிற வடிவமைப்பு காணப்படும், இந்த மந்தாரைகளை இரு உச்ச பூ பூக்கும் பருவங்களில் பொதுவாகக் காணலாம்; ஜனவரி முதல் மார்ச் வரையிலும் மற்றும் ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலும் ஆகும்

வேடிக்கையான தகவல்கள்

Aliyagaha--Baobab-Tree-lg
Shopping Basket
WNP

FREE
VIEW