பல்வேறு அளவுகளில் மற்றும் வண்ணங்களிலான பறவை இனங்கள் பூங்காவில் காணப்படுகின்றன. உங்கள் வசமிருக்கும் தொலைநோக்கிகள் இப்பறவை இனங்களை அவற்றின் இயல்பான நிலையில் அவை இயற்கையாக வாழுமிடங்களில் அவதானித்திட பெரிதும் உதவும் மேலும் உங்களின் வனச் சுற்றுப் பயணத்தின் போது நீங்கள் அவசியமாக பார்க்க வேண்டிய காட்சிகளை நீங்கள் தவறவிடாவில்லை என்பதனையும் இவை உறுதிசெய்திடும்.
சாம்பல் நிற இருவாச்சி, கபிலக் கொண்டை சிலம்பன்கள், செந்நிறமுதுகு மரங்கொத்தி மற்றும் இலங்கைக் காட்டுக்கோழி போன்ற பல உள்ளூர் இனங்கள் உட்பட மொத்தம் 149 வகையான பறவைகளை எளிதாக அவதானிக்கலாம்.
மரதன்மடுவ குளத்தில் இடம்பெறும் மஞ்சள் மூக்கு நாரைகளின் பாரியளவிலான இனப்பெருக்கம் பெரும்பாலான ஆண்டுகளில் காணக்கிடைக்குமொரு பொதுவான காட்சியாகும். அரியவகையிலான மலபார் தீக்காக்கைகளை (ஹார்பாக்டெஸ் ஃபாஸியாட்டஸ்) அவதானிக்க ஏதுவான தளம் வில்பத்து பூங்காவேயாகும். சமீபத்திய காலங்களில் அயனமண்டலத்தில் இவற்றின் பரவல் அதிகளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் இது அதியுயர்ந்த பருவமழைக் காடுகளின் தரத்தைக் குறிக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் முதல் அடுத்துவரும் ஆண்டு ஏப்ரல் வரையிலானகாலப்பகுதியில் ஐரோப்பா, மேற்கு ஆசியா மற்றும் இந்தியாவிலிருந்து புலம் பெயரும் பறவைகள் குளிர்காலத்தை தவிர்க்க இலங்கையின் வெப்பமண்டல வலயங்களை நோக்கி பறக்கின்றன.